ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தமிழமுதுதேன் சாரல் --மரபுக்கவிதை--8-8-2017

அன்புடையீர்,அனைவருக்கும் வணக்கம்.
தேன்சாரலில் 8/8/17 நாளாம்
மரபுக்கவிதை போட்டியில் வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்தும் போட்டியில் கலந்தது கொண்ட கலந்து ஏனையோருக்கு வாழ்த்துகள்
மரபுக்கவிதை நடுவர்களாக கவிதாயினி கவிச்சிற்பி சரஸ்வதி பாஸ்கரன் பங்கேற்று சிறப்பான மரபுக் கவிதைகள் தேர்வு செய்துள்ளார்கள் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
குறள்வெண்செந்துறை
பொது இலக்கணம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
#தமிழமுது_தேன்சாரல்_நிர்வாகத்தின
குறள் வெண்செந்துறை
கல்வி
கசடிலாக் கல்வியே காரிருள் நீக்கும்
கசடறக் கற்றலே கல்விக் கழகே
கல்விதான் ஆயுதம் கற்றவர்க் கென்றும்
கல்வி யறிவு கடவுளைக் காட்டுமே
ஒழுக்கம்
ஒழுக்கம் இல்லையே லொருவரும் மதியார்
அழுக்காய் நினைத்தே அகற்றி விடுவரே
வழுவிலாப் பழக்கம் வளமுள தாக்குமே
ஒழுங்கும் முறையு மோம்புதல் சிறப்பே
பெற்றோர்
நல்ல மனிதராய் நாளும் வாழ்ந்திட
மெல்ல பெற்றவர் மேன்மை செய்வரே
அல்லும் பகலும் அன்பால் அறிவுரை
சொல்லும் சிறப்பு சொந்தமாய் ஆனதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக