ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா-- 28-9-17--படப்போட்டி

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் 28/09/2017ம் நடத்திய படம் பார்த்து கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் Misrul Sareena
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
வறுமையிலும் நேர்மையுடன்
பிழையில்லா பிழைப்பொன்றே
பெருமையாய் எண்ணி சுமைசுமக்க
கைவண்டி இழுக்கிறார்
வஞ்சித்து வாழ்வதை விரும்பாமல்
கெஞ்சுவதை கேவலமாய் எண்ணி
உழைத்து வாழவேண்டும் பிறர்
உழைப்பில் வாழ விரும்பாததால்
ஒட்டுமொத்த குடும்ப சுமையையும்
தன்கையே தனக்குதவி யென
தன்னம்பிக்கையுடன் பசி தீர்க்கிறான்
வலிமையைத் தோளிலே பூட்டு பசி
வயிறார உண்ணவே உன் கரம் நீட்டு
தளர்வையே தனியாக ஓட்டு என
தன்னம்பிக்கையோடு உழைத்து
தனித்துவமாய் வாழுகி்றான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக