ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தமிழமுது கவிச்சாரல்==20-8-2017 ==உன்னைப் பார்க்காத விழிகள்சேதாரமாக்கின்றன

இனியவரீர்,, அனைவருக்கும் வணக்கம் பாவலர்களே
****
*#தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் : 20/.08/17 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_உன்னைப்_பார்க்காத_விழிகள்_சேதாரமாகின்றன
வெற்றிச் சான்றிதழ் பெறுபவர் #கவிஞர்_
சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துகள்
#கவிதாயினி_கவிஇமயம்_உஷாராணி அவர்கள் நடுவராக தலைமையேற்று சிறப்பான கவிதைகளை தேர்வு செய்தமைக்கு அவருக்கு நன்றிகளும் வாழ்த்தும்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்
அன்னமே உன் கண்களால்
என்னை கைது செய்தாய்
அன்று முதல்
என்னில் நிறைந்த
எண்ணத் திவலைகள் முழுதும் உன்
வண்ணப் பிம்பங்களே சிறகடிக்கின்றன
சத்தமில்லா நெஞ்சுக்குள்ளே
சலசலப்பைத் தந்தவள் நீ
சங்கெடுத்து முழங்கி விடு
சம்மதத்தைச் சொல்லி விடு
நேசக் குரல் எடுத்து என்
நெஞ்சம் குளிரவை
எரிகின்றத் தீயாலே எல்லாம் அழியும் பின்
இருப்பதில் பயனுண்டோ சொல் உன்
அன்பு மனம் ஒன்றால்தான் என் துன்பங்கள்
நீங்கும் புரிந்துகொள்
கோடையாய் வந்து வாட்டாமல்
தென்றலாய் வந்து மனம் சிலிர்க்க வை
உன்னைப் பார்க்காத விழிகள்
சேதாரமாகின்றன
என்னுடையமன நிலைக்கு
உன் அன்பே ஆதாரமாகின்றது
உன் வார்த்தைகளே
எனக்கு தேவாரமாய்த் தோன்றுகிறது
வாலிபத்தில் வாஞ்சையாய்
வயதொத்தத் தோழியாய்
வருங்கால வாழ்க்கையை
வளமாக்க வருவாய் அன்பே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக