ஞாயிறு, 22 அக்டோபர், 2017

3-8=2017 கவியுலக்ப்பூஞ்சோலை-வாழ்க்கைபயணம்

வணக்கம்!!!
கவியுலகப் பூஞ்சோலை பாவலர்களே....
03.08.2017 நாளன்று நடந்த
#வாழ்க்கைப்_பயணம்
தலைப்பு போட்டிக் கவிதையில், சிறப்பான கவிப்படைத்து
🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉
கவிஞர் #சரஸ்வதி_இராசேந்திரன்
🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎉
அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்...அவருக்கு
🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺
#வாலி_சான்றிதழ்
🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺
வழங்கப்படுகிறது.
அவருக்கு எமது குழுமம் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்....
தலைமை நிர்வாகி மற்றும் குழுமம்...'
வாழ்க்கைப்பயணம்
கண்ணதாசன் சான்றிதழ்---5
இனிக்கும் இளமை தொடங்கி
இறுதிப் பயணம் வரையில்
செல்லும் வழிப்பயணம் எல்லாம்
முடிவிடம் தொடுவதில்லை
காற்றடைத்தப் பையில் அடங்கியதோர்
தோற்றமே பிறவித் தொடர் தெளிக
நிகழ்வதும் நிகழ்ந்ததும்
நிகழப்போவதும் நம் கையில் இல்லை
நல்லது கெட்டது எண்ணிப் பாராமல்
நதிபோல் விரையும் வாழ்க்கைப்பயணம்
எண்ணத் தகாத எதையும் வாழ்க்கையில்
எண்ணாது இருப்பதே என்றும் மேல்
ஆல விழுதுபோல் மூத்தோர் வாழ்க்கைதான்
கால நடப்பை சொல்லும் பாடம் நமக்கு
வாழ்க்கைப் பயணத்தை வழுவிலாது காத்து
வளமுடன் வாழ்வதே என்றும் சிறப்பு
காலத்தின் இடைவிடா சுழற்சியில்
கரைகிறது வாழ்க்கைப் பயணம்
இருக்கும் பேராசை பெரிதாகி
பெருங்கேடு கொள்கிறோம்
நாட்களைத்துரத்தி ஓடுகிறோம்
நாளும் பணத்தைப்பெருக்கிடவே
வந்ததைக் கொண்டு வாழ்ந்தபின் கடவுள்
தந்ததைக் கொள்வதே சிறப்பு
நல்லவை மட்டுமே நாளும் செயல் படுத்தும்
வல்லமை கொள்வோம் வாழ்க்கை பயணத்தில்
முடியும் பயணத்தில் முடிந்த வரை வாழ்வின்
விடை தெரிந்து வாழ்ந்து விடுவோம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக