திங்கள், 23 ஜூன், 2014

நீயுமாம்மா..... தங்க மங்கை---டிசம்பர் --2013


மாளவிகா பிறந்த வீடு வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன
அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை .அப்ப்டி ஒரு மாற்றங்க்ள்,பெருமூச்சுகள்.எதிகாலத்தைப் பற்றி கற்பனைசெய்து
கூட பார்க்கமுடியாத அளவு இருட்டு ,குழ்ப்பங்கள்.....
இத்தனைக்கும் அவ்ளும்சரி ,க்ணவன்கருணாவும் சரிஉருகி ,உருகி
காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டார்க்ள்,திருமணம் ஆகி
ஓராண்டு கூட நன்றாக வாழ்வில்லை .கருணா ,மாளவிகாவை திருப்பி அனுப்பி விட்டான் தாய் வீட்டுக்கே .என்று தாய் வீட்டு வந்தாளோ அன்றே அவ்ள் சொந்த வீட்டிலேயே இர்ண்டாம் தர
மனுஷி யாகி விட்டதை உன்ர்ந்தாள் .சொந்ததாய்க்கூட அவ்ளுக்கு அனுதாபம் காட்டினாலேதவிர அவ்ளை பாராட்டவில்லை,சீராடவும் இல்லை .’
‘’அவ்னைத்தான் திருமணம் செய்துக்குவேன்னு என்னையே எதிர்த்துப் பேசினே,இப்போ அதை தொலைச்சுட்டு வந்து நிற்கிறே அந்த பிள்ளை நல்லவனாகத்தான் தெரிகிறான் ,அவ்னுடன் அனுசரிச்சு வாழ்றதை விட்டுட்டு .....வந்து நிற்கிறே’’
‘’என்னம்மா சொல்றே,அவ்ர்தானே என்னை போகச்சொன்னார்?’’

‘போகச்சொன்னா வந்துடுவியா? திருமணம்கிறதை நீயாத்தானே தேடினே , நீபாட்டுக்கு தொலைக்காட்சித் தொடரில் நடிச்சுகிட்டு ,காசு வசதின்னு நிம்மதியாஇருந்தே ,புகழோட இருந்தே
இத்தனை புக்ழோட இருக்கிற உனக்கு த்ருமண வாழ்க்கை நிறைவா அமயணுமேன்னு நான் பயந்தேன் ,ஆனால் நீபிடிவாதம்
பிடிச்சே நான் தடுக்கலே பண்ணிகிட்டே அப்போ அவன் ஆசைப்படித்தானே நீ நடந்துக்கனும் ,உன்க்கு நாம ஒரு பிரபல நடிகை என்கிற க்ர்வம் இல்லாம தாழ்ந்துபோயிருந்தீன்னா அவ்ன் உன்னை
அனுப்பியிருக்கமாட்டான் ,னீ வீராப்பு காட்டினா ,திமிர்ன்னு நினைப்பாஙக்ளா இல்லையா?.கெளரவம் ,புகழ்ங்கிற தலைக்கனம்
இருக்கும்போது நீதாழ்ந்துதான் போயிருக்கணும் அவ்தாண்டி வாழறபொண்ணு ‘’
‘’அம்மா நீயுமாம்மா....என்னை புரிஞ்சுக்காம பேசுறே வசதியே இல்லாத அவ்ர் வீட்டிலேனான் இத்தனை நாள் இருந்திருக்கேனே
,என் ஆடம்பரத்தை காட்டலியே ,பழச்சாறும் ,பழமுமா தின்ன நான் ,அவ்ர் வீட்டிலேபழைய சோறு சாப்பிட்டேன் அது பற்றி
எந்த குறையும் யாரிடமும் சொன்னதில்லையே ,அவ்ர் எப்படி இருக்கனும்னு சொன்னாரோ அப்படித்தான் இருந்தேன் எவ்வள்வோ
விட்டுக் கொடுத்துத்தான் வாழ்ந்தேன் ஏன்னா காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டதாலே,அது தெரியுமா உனக்கு ?’’
அப்புறம் ஏண்டி அனுப்பினார்?’’
‘’ஆடம்பரமா வாழ்ந்த உன்னாலே எப்படி அடக்கமா வாழமுடியும்னு
என்னை சந்தேகப்படுகிரார் நான் அடக்கமா இருப்பதை நடிப்புன்னு
சொல்றார் ,உன் நடிப்பெல்லாம் தொடரோட நிறுத்திக்க ,சாதாரணபெண்ணுன்னா ,அது வேண்டும்,இது வேண்டும்னு சண்டை போட்டிருப்பா .. நீ உண்மையா இல்லேன்னு
சொல்றார் நான் என்ன செய்ய/’’அழுதாள் மாளவிகா
‘’இப்படி ஒரு நிலை வரும்னு தெரிஞ்சிருந்தா நீதிருமணமேசெஞ்சுக்காம இருந்திருக்கலாமே நீ பாட்டுக்கு நடிச்சுகிட்டு நிம்மதியா இருந்திருக்கலாமே ,காதல் கீதல்னு மாட்டி இப்பவாழாவெட்டியா வந்து நிற்கிறதை பார்க்க என்னால தாங்க்முடியலடி ..’மகளை கட்டிக்கொண்டு அழுதாளந்தத்தாய்
‘’காசு பண்ம் கேட்டு அடிப்பார்கள் பார்த்திருக்கிறாள் அடக்கமா இல்லைன்னா திட்டுவார்கள் இவன் என்னடாவென்றால்...ஏன் அடக்கமா இருக்கிரேன்னு ...ஒரு வேளை சைக்கோவா இருப்பானோ
புரியவில்லை ....ஏன் இப்படி? நினைத்து நினைத்து அழுதாள் மாள்விகா,,,
டிசம்பர் 2013 தங்கமங்கை இதழில் வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக