திங்கள், 23 ஜூன், 2014

காரணம்


பிள்ளை வீட்டாருக்கு பெண்ணை பிடித்துப்போனது ,சம்பிரதாய பேச்சுக்கள் எல்லாம் முடிந்ததும் கிளம்ப முற்படுகையில் ,பெண் கேட்டாள் ''ஒரு அஞ்சு நிமிஷம் உங்க பையனிடம் பேசணும் ''என்றாள்
மருண்டுபோன மனைவியை கண்ணாள் அடக்கிவிட்டு பிள்ளையை பெற்றவர் ''அதனாலென்ன ,தாராளமா பேசும்மா ''
உள்ளே போய் பேசி வந்ததும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர் .அடுத்தநாள் ----பெண் வீட்டாரிடம் இருந்து செய்தி வந்தது என் பெண்ணிற்கு இந்த திருமணத்தில் இஷ் டமில்லைஎன்று . காரணம் புரியாமல் பிள்ளை வீட்டார் குழம்பினார்கள்
ஏண்டா ',உனக்கு பெண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்னெயில்லெ உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? நீயாரையாவது காதலிக்கிறேன்னு சொன்னியா ?''கேட்டார் அப்பா
''அப்பா ,அவள் ஏதும் பேசலே ,,என் செல் நம்பர் கேட்டாள் ''
''நீ கொடுக்கவேண்டியது தானே ?''
''கொடுத்துட்டேன் அப்பா ''
''அவள் ஏதேனும் பேசி நீ ஏடாகூடமா பேசினாயா?''விசாரித்தார்
''அவள் என்கூட பேசவே இல்லையே''
''அப்புறம் ஏண்டா பிடிச்சிருக்குன்னு சொன்னவ இப்போ பிடிக்கலைன்னு சொல்லுறாள் ''
''எனக்கே ஒன்னும் புரியலப்பா ''
''இல்லே வேறு யாராவது உன்னைப்பற்றி விஷமமா ஏதாவது கதை கட்டி விட்டிருக்கான்களா?''
''அவள் யாரையாவது விரும்புறாலோ என்னவோ அதை மறைக்க ,,இப்படி சொல்றாளோ என்னவோ என்ன கன்றாவியோ போய் தொலை ய ட்டும் விட்டுத்தள்ளுங்க ''அம்மா முடித்து வைத்தாள் சம்பாஷணையை
பிறகு ,,தெரிந்தவர் ஒருவரிடம் கேட்டால் ''ஒரு செல் நம்பரைக்கூட ஆங்கிலத்தில் சொல்லத்தெரிய சொல்லத்தெரியலையேன்னுதான் வேண்டான்னுட்டாள் னு ''சொன்னார்
இது எப்படி இருக்கு? ஒரு தமிழன் தமிழில் பேசுறது தப்பா ?காலக்கொடுமையா இருக்கே
இந்த காலத்துப்பெண் கள் என்னதான் நினைக்கிறார்கள் னு புரியலே யே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக