வெள்ளி, 15 மே, 2015

be positive tamil---may 15 -5-2015----தமிழின்புகழ்

பண்டு முதல் இன்றுவரை உயர்ந்த மொழி தமிழ்
கண்டுபலர் சிரம்தாழ்த்தி விண்டுரைத்தார் புகழ்
கண்டவரும் கேட்டவரும் மகிழ்கின்றார் காண்
பண்டவரும் பல்லவரும் சிறப்படைந்தார் தமிழால்தான்
நித்தம் நித்தம் விண்டுரைப் போம் தமிழின் புகழை
சித்தமதில் மகிழ்ந்திடுவோம் அத்தமிழின் எழிலை
பசுந்தமிழ் செந்தமிழ் பைந்தமிழ் தீந்தமிழ்
இசையுரு பொருளெல்லாம் குறிப்பது தமிழையே
சிறந்த புலவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா
நிறைந்தபொருள் கொண்டவர் தம்கவிதை வியப்பிலடங்கா
பசுந்தமிழ் உலகினில் பலகலை உயரவே
பழியறப் படித்திடு பாங்குடன் வாழவே
செந்தமிழ் நாட்டினில் செயல்படு உயரவே
செழிப்புடன் வாழ்ந்திடு சிந்தனை பெருகவே
கேளீர் கேளீர் செந்தமிழின் சிறப்பை யெல்லாம்
வாரீர் வாரீர் அழகுதமிழ் மொழியை கற்றுணர

– சரஸ்வதி ராசேந்திரன்

2 கருத்துகள்: