ஞாயிறு, 24 மே, 2015

வல்லமை -புகைப்படபோட்டி -13



படிப்பில் கோட்டைவிட்டு, அன்னையின் அடிக்கு பயந்து மரமேறிய பாலனுக்குப் புத்திமதி சொல்லும்திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…



போனால் போகட்டும் போடா
படிக்கின்ற நேரத்தில்
பட்டம்விட்டு
திரிந்தாய்
காலை மாலை
கண்டபடி 
சுற்றினாய்
சொல்லச் சொல்ல
கேட்காமல்
நாயின் வாலைப்போல்
நிமிராது நின்றாய் 
படிக்கும்போது 
இல்லாத பயம்
அடிக்குப் பயந்து
மரமேறி அமருகிறாய்
போனால் போகட்டும்
வெற்றியும் தோவியும்
வீரனுக்கழகு
ஒன்பதாவதுதானே
அடுத்தமுறையாவது
அயராமல் படித்து
உயரப்பார்
அடிக்கமாட்டேன் 
இறங்கி வா


மேயும் மனதை
அடக்கி ஒடுக்கி
மெய்யாய் படித்து
மேன்மை அடையலாம் வா
இந்தமுறை
போனால் போகட்டும் 
வாடா என் கண்ணா
வந்து சாப்பிடு..
அம்மா அடிக்கமாட்டேன்
இது சத்தியம்.
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக