திங்கள், 18 மே, 2015

வல்லமை--புகைப்பட போட்டி--12 அனுதாபம்

’மன ஊனம் கொளலே தீது! உடல் ஊனம் முன்னேற்றித்திற்கென்றும் தடையாயிருந்திடாது!’ எனும் உற்சாகச் செய்தியை வரலாற்றுச் சாதனையாளர்கள் வாயிலாய் அறியத்தரும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

  • அனுதாபம்
    மன ஊனத்தைவிட
    உடல் ஊனம்பெரிதல்ல
    உடல்  ஊனம்மாற்ற முடியாதது
    கை இல்லாமல்
    கால்களால் கார் ஓட்டுகிறார்
    கண் பார்வை இல்லாதவர்கள்
    இருளையே துணையாககொண்டுசெய்யும்
    காரியங்கள் அற்புதம்
    பீதோவன்செவிடாகிருந்த
    நிலையில்தான் 
    சாகாவரம் பெற்ற ராகங்களை
    உருவாக்கினார்
    கவிஞர் மில்டன்
    பார்வையற்ற நிலையில்தான்
    சொர்க்கம் இழக்கப்படல் 
    என்கின்றகாவியம் எழுதினார்
    ஜூஇல்யஸ்சீசர்
    காக்கா வலிப்பு  நோய்
    இருந்தபோதும் மாவீரனாய்
    திகழ்ந்தார்
    இவர்கள்யாரும் யாரிடமும்
    அனுதாபத்தை
    எதிர்பார்க்கவில்லை
    தங்க ள் குறைபாடுகளை ஈடுசெய்ய
    மிக உயர்ந்த கோட்பாடுகளை
    உருவாக்கிக் கொண்டவர்கள்
    இதோஇந்த மனிதனும் அப்படியே
    தன் மகன்களின்
    சந்தோஷத்தில் மகிழ்ச்சி/கொள்ளும்
    மன உறுதி கொள்கின்றார்
    வாழ்க்கையில் எந்தவித
    குறைபாடும் இல்லாதவர்கள்
    வாழ்க்கையைப்பற்றி
    குறை கூறிக்கொண்டீருக்கும்
    நாம்தான் வெட்கி தலை
    குனிய வேண்டும் அவ்ர்கள்
    வாழ்க்கையைப்பார்த்து
    வீணான அனுதாபமும்
    அணுசரணையும் அவர்களை
    வீழ்த்துமே தவிர உயர்த்தாது
    சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக