வியாழன், 28 மே, 2015

வல்லமை --29--5--2015 -- நாட்டுப்புற பாடல்

Home » இலக்கியம், கவிதைகள் » நாட்டுப்புறப் பாடல்!
நாட்டுப்புறப் பாடல்!
Friday, May 29, 2015, 5:46இலக்கியம், கவிதைகள்Add a comment
-சரஸ்வதி ராசேந்திரன்
பெண்: ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கையிலே
என்மனசைப் பறிகொடுத்தேன் மாமா
உன்மனசில் எனக்கிடம் தரலாமா?
ஆண்: கண்டாங்கி சேலைகட்டிக்
கை நிறையக் கொசுவம் வைச்சுக்
கஞ்சிக்கலையம் சுமந்துவரும் கண்ணம்மா என்
நெஞ்சுக்குள்ளே நீ இருக்கே தெரியுமா?
பெண்: வக்கணையாச் சோறாக்கி
வட்டிலிலே போட்டுவைச்சேன்
சட்டமாத் தின்னுபோட்டு நீ
வெட்டிக்கதை பேசாம
விரசா வந்து பரிசம் போடு மாமா உன்
சரசமெல்லாம் தாலிக்கப்புறமா!
ஆண்: நாளும் நல்லா உழைச்சு நான்
நாலு காசு சேர்த்துச்
சொந்தக்காலில் நின்னு
வந்து உன்னை முறையா கேட்பேன் தாலி
தந்தபின்னே உன்னைத்தொடுவேன்!
பெண்: வாழ்ந்தால் உன் கூட வாழணும்
உன்கையாலே பூமாலைவாங்கோணும்
அதுதானே என் ஆசை மாமா!
ஆண்: எனக்கது நீ சொல்லித் தெரியணுமா?
உனக்காகத் தானே நான் இருக்கேன் கண்ணம்மா!
இருவரும்: நல்ல நாளும் கனியட்டும்
நாடு நல்லாச் செழிக்கட்டும்
பெத்தவங்க ஆசியோடும்
மத்தவங்க வாழ்த்தோடும்
மணவறையில் அமர்ந்திடுவோம் நாமே
வானம் பூமிபோல நிறைஞ்சிருப்போம்
வாழ்வு தாழ்விலே இணைஞ்சிருப்போமே!
நன்றி-வல்லமை--29-5-20vallam

4 கருத்துகள்:

  1. வணக்கம்
    அம்மா.
    பாடல் அருமையாக உள்ளது வல்லமை இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரூபன்---சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன்------------சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு