சனி, 11 ஏப்ரல், 2015

கவிதைகள்----2013

நீ போதும் ---
எந்த கணக்கையும் 
எளி தாக போடுகிறாய் 
பாரன்ஹீட்டை 
செல்சியசில் 
மைல் களை
கிலோ மீட்டரில்
மாற்றி கொடுக்கிறாய்
எந்த நாட்டின்
கரன்சியையும்
இன்னொரு நாட்டின்
கரன்சி மதிப்பில்
சொல்லித்தருகிறாய்
எந்த ஊரின்
சீதோஷன நிலையையும்
டக்கென்று சொல்கிறாய்
பார்சல்களின் பயண நிலையை கூட
இருந்த இடத்திலிருந்தே
தெரிந்து சொல்கிறாய்
சொல்லின் பொருளைக்கூட
சொல்கிறாய் என்றால்
அதன் உச்சரிப்பைகூட
அழகாக சொல்லித்தருகிறாய்
பிள்ளைவெளி நாட்டிற்கு
தனியாக போனால் கூட
அந்த நாட்டிற்கு எப்போது
புறப்பட்டு,எங்கெல்லாம் பறந்து
எப்போது போய் அந்த
நாட்டிற்கு எப்போது போய்
சேருவான் என்று கூட
சரியாக சொல்கிறாய்
இத்தனையையும் சொல்லித்தரும்
இணையமே உனக்கு நிகரில்லை
ஆகவே எனக்கு நீ போதும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக