திங்கள், 13 ஏப்ரல், 2015

படப்போட்டி --6 வல்லமை இதழ் ---ஏப்ரல் 1

saraswathirajendran wrote on 1 April, 2015, 20:35
              சொத்துப்பத்தும் ஏதுமில்லே
            சொந்தபந்தம்   யாருமில்லே
             வானம்       பொய்த்ததால்
             வயல் வேலை  கிடைக்கலே
             வீட்டு வேலை   முடிஞ்சதும்
             கட்டியிருக்கும்   மாட்டை
             ஓட்டிப்போ மேய்ச்சலுக்குன்னு
             முதலாளி  ஆணையிட 
              தொழிலாளி யான நானு
             ஒத்தையடி      பாதையிலே
             ஒத்தை மாட்டை  ஓட்டிகிட்டு
             ஊருகடைசியிலே புல்லுத்தேடி
              பாருக்குட்டி    நான் நடந்தேன்
              யாருமில்லா   ஏழைஎனக்கு
               சாரமில்லா   வாழ்வதிலும்
                சோறுபோடும் முதலாளியும்
                இந்த பசுவும்தான்  தெய்வம்

சரஸ்வதி ராசேந்திரன்
               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக