செவ்வாய், 29 மார்ச், 2016

தமிழ்த்தேர்--தை மாத இதழ்


தைமாதம் ---தமிழ்த்தேர்
புதிது நன்றி தமிழ்த்தேர்
புதிது
தாய் சுரக்கும் தாய்ப்பால் புதிது
சேய் பேசும் மழலை புதிது
மேகம் கொட்டும் மழை நீர் புதிது
அகம் புறம் தூய்மை புதிது
சுனை சுரக்கும் நீர் புதிது
வினை இல்லாத மனிதன் புதிது
முட்டையிலிருந்து குஞ்சு வருவது புதிது
மொட்டில் புதைந்திருக்கும் மணம் புதிது
தன்னை உணரும் நிலை புதிது
பின்னர் அங்கே தோன்றும் ஜோதி புதிது
வஞ்சம் வளராத நெஞ்சம் புதிது
லஞ்சம் வாங்காத மனிதன் புதிது
தெய்வீகத் தமிழ் புதிது
திருப்புகழ் என்றும் புதிது
வியனுலகில் விஞ்ஞானம் புதிது
ஐயா அப்துல் கலாம் புதிதில் புதிது
மண்ணின் மணம் புதிது
என்னின் கவிதை என்றும் புதிது
சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக