வியாழன், 3 மார்ச், 2016

தடாகம் கலை இலக்கியபோட்டி பிப்ரவரி

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி பெப்ரவரி மாதம் 2016
33 - எரியும் மனசு
எரியும் மனது (பிப்ரவரி மாதபோட்டி )
பொய்யையே பிழைப்போரைக் கண்டால்
மெய்யாகவே கொந்தளிக்கும் மனது

அர்த்தமற்ற அடாவடிகள்செய்வோரைகண்டால்
ரத்தம் சூடேறி கொதிக்கும் மனது
திருந்தும்மனமின்றி தீவிரவாதம்செய்பவரைக்கண்டல்
வருத்தம் மேவி எரியும் மனது
பண்பாடு அழிக்கும் நவ நாகரீகம்
கண்டால் குமுறி எரியும் மனது
ஊழல் செய்யும் தலைவன் இருந்தால்
அழுகுரல் காணும் நாடுஎரியும்
பலாத்காரம் கற்பழிப்பு செய்வோரை
கொலை செய்ய துடிக்கும் மனது
வாழ்கின்ற வாழ் நாட்களெல்லாம்
தாழ்வகற்றி வாழ்ந்தால்எரியும் மனது அடங்கும்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக