வெள்ளி, 10 ஜனவரி, 2014

--இன்றைய சினிமாவின் போக்கும் ,சமுக பாதிப்புகளும்

                                             தைப் பொங்கல் சிறப்பு கட்டுரை  --இன்றைய சினிமாவின் போக்கும் ,சமுக பாதிப்புகளும்
 இன்றைய  திரைப் படங்களில்  நல்ல கதை கிடையாது ,நல்ல கருத்து கிடையாது ,ஏன் பாடல்கள் ,வசனங்கள்  கிடையாது ,ஒரு தலைப்பு கூட கிடையாது ,,நகைச்சுவை  என்ற பெயரில் அடிக்கிற கூத்து களை  சொல்லவே  வேண்டாம் , இலை மறை காயாக  காட்டப்பட்ட விஷயங்கள் எல்லாம் அம்பலத்தில்  ஏறி  பார்ப்பவர்களை அருவருக்க வைக்கிறது,இன்று குடும்பத்தோடு  அமர்ந்து சினிமாவை பார்க்கமுடிவதில்லை ,
சினிமாவினால் ஏற்படும் பாதிப்புகள் ;;
இன்றைய சினிமாவின் தலைப்புகளே  வன்முறையை   தூண்டுவதாக உள்ளது ,பெயருக்குகூட பஞ்சம் ,குஸ்தி , தகராறு ,வீராப்பு , குத்து ,ரகளை , அடிதடி  இப்படி வைத்தால்...பாதிப்பு என்பது  உயிர்களோடு மட்டும் சம்பத்தப்பட்டது  அல்ல ,அது மிக நுட்பமான விஷயங்களோடும் சம்பந்தப்பட்டது ,இது போன்ற படங்கள்  எதிர் மறையான அதிர்வுகளை தந்து  இளைய தலை முறைகளை  வன்முறைக்கு    தூண்டுகிறது ,நல்ல விஷயங்களை சிதைத்து  சுயநலத்தை  வளர்க்கிறது . ,காதல் என்றால் பெற்றோர்களை  எதிர்த்து ,வீட்டைவிட்டு  ஓடுவதாக காட்டுகிறார்கள் ,காதல் திருமணத்தின்  பின் விளைவுகளை   சினிமாவில் காட்டுவதில்லை , எதற் கெடுத்தாலும்  அடிதடி ,வன்முறை  என்று காட்டுவதால் தங்களை தாங்களே ஹீரோவாக  காட்டிக்கொள்ள இளைஞர் கள்  அதைப்பார்த்து  அவர்களும்  வன்முறையில் ஈடு படுகிறார்கள்  இரட்டை அர்த்த  வசனங்களும், நாராசமாக இருக்கின்றன என்பதுதான் உண்மை  பழிக்குப் பழி , ,வெட்டு  கொலை என்று மாணவ சமுதாயமும்   கெட்டுப்போகின்றன ,ஆகவே  படைப்பாளிகளும் ,இயக்குனர்களும்  முழுமையான ஆரோக்கியமான படங்களைத் தரவேண்டும் ,மனித நேயப் பண்புகளையும் .பரந்த மனப்பான்மையையும்   கூடிய படங்களை உருவாக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம் ,, இன்றைய குழ்ந்தை கள் கூட   மனபாதிப்பு அடைகின்றனர் , பாதிப்புகள் நீங்க வேண்டுமானால்   வன்முறை காட்சிகளும் ,,ஆபாச காட்சிகளும்
நிறுத்தப்படவேண்டும் 

2 கருத்துகள்:

  1. நல்லதொரு கட்டுரை... பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... ஆர்வத்துடன் கலந்து கொண்டமைக்கு நன்றி... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு அம்மா...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு