வியாழன், 20 ஜூலை, 2017

சங்க்தமிழ் சான்றிதழ்==28-6-2017==மலரோடு மலரனால்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 28/06/2017நடந்து முடிந்த காதல் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் Kumar Sathiyan
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
மலரோடு மலரானாள்
மலரோடு மலரானாள்
மணம் வீசி எனைக் கவர்ந்தாள்
தொடுக்கும் மலர் போல்
தொடர்ந்து மணம் வீசுவாள்
வான் விதைத்த வடிவழகி
மான் மயங்கும் பேரழகி
தேன் சுரக்கும் கனியிதழகி
நான் கிறங்கும் மொழியழகி
சொல்லில் விளக்கமுடியா
சொக்க வைக்கும் செந்தாழம் பூவழகி
பூக்களின் நந்தவனம் நீ
புன்னகை தேசத்தின் புது வரவு நீ
பூத்திட்டாய் புது வசந்தமாய் என் மனதில்
பொன்னழகு பூவழகியே
பொன் மனம் கொண்டவனை ஆதரிப்பாய்
பூ உன்னைத் தேடும் வண்டானேன்
பூவை உன்னை பூவாக நான் நடத்துவேன்
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன் உனக்காக
உனைக்கண்டு உயிர்த்தெழுந்தேன்
போதுமடி உன் மோடி
பூவை உன்னைத்தேடி
வந்தேன் உனை நாடி
காதல் பாட்டுப்பாடி
உனை நானும் அடையாது
என் விழிவாசல் மூடாது
பூவெடுத்து மாலை தொடுக்க நீ வரலாம்
பூங்காவனத்திலே சோலைக்குயில் போல்
சொக்கிக்கிடப்போம் வா பூவரசியே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக