புதன், 28 ஜூன், 2017

உயிர் கொண்ட ரோஜாவே-சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா-11-5-2017

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 10/05/2017நடந்து முடிந்தகாதல் கவிதை எழுதும்
போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்
கவிஞர் இதயம் விஜய்அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
உயிர் கொண்ட ரோஜாவே
மலர்களிலே தனியொரு கோலம் காட்டி
மங்கையரின் கூந்தலுக்கு அழகுக் கூட்டி
நின்றாடும் தோட்டத்திலே எழிலைக் காட்டி
நிறைவாக்க வாங்குவான் காதலிக்குக் காசை நீட்டி
உயிர் கொண்ட ரோஜாவே உனைச் சூடும் என்
உயிரான காதலிக்கு உறவான ரோஜாவே
ரோஜா மலரிங்கு செண்டாடுது இந்த
ராஜா மனம் அதைக் கண்டுப் பந்தாடுது
என் கண்ணில் ரோஜாவாக இருப்பவளே
என் நாவில் கவிதையாய் வாழ்பவளே
மங்கை நீ வாய் திறந்தால் ரோஜா வாசம்
மன்னவன் எந்தன் வாய் உன் பேரை உச்சரித்தே பேசும்
பெண்ணே உன்னாலே நான் வாழ்கிறேன்
கண்ணே உன் கண்ணாலே உலகைப் பார்க்கிறேன்
மண்ணில் நாம் பிறந்தது ஒன்றாக வாழத்தான்
கண்ணைப் போல் காதலை நாம் காப்போம் வா
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக