வியாழன், 4 ஆகஸ்ட், 2016

அமுதசுரபி படம் பார்த்து கவிதை --ஜீன் 24

படம் பார்த்து கவி--தமிழ்க்கவிதை(அமுத சுரபி புத்தகம் )
கலக்கல் பார்ட்டிகளாய்
சளைக்காத பாட்டிகள்
கடைக்குப்போகணும்னாகூட
நடையா நடக்கனும் ஒரு நேரம்
சுயம்பாய் சுழலுகிறோம்இன்று
சுயபுத்தி கொண்டு நாங்க
வியக்கும் இந்த செயல்களால்
வீதியில் போவோர்களெல்லாம்
வாய் பிளந்து பார்க்கிறார்
அண்டாகுண்டா தூக்கியகை
ஹோண்டாவையும் ஓட்டுது பார்
முதுமை அனுபவம்முக்கியம்
விதையாய் முளைந்துவரும்
சிரிக்கின்ற பெண் உள்ளங்களே !
சிறப்பாக்கிக் கொள்ளுங்கள் உங்களையும்
உற்றது உணர்ந்தே உயர்ந்தோங்கிவாழ்வோம்
ஆற்றும் செயல்கள் எல்லாம்துணிச்சலால்தான்
அவ்வை சண்முகி என்று சொன்னாலும்
சந்திரமுகி என்று சொன்னாலும்
சந்திர மண்டலத்துக்கும் போகும்
சரித்திர பாட்டிகளாய் இடம் பெறுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக