வியாழன், 16 ஜூன், 2016

தமிழ்க்கவிதைப்பூங்கா கவிதை-17

தமிழ்க்கவிதைபூங்கா கவிதை--17


14=6-2016
காலை வணக்கம்
கவிதை முடிவு இதோ!
14/06/2016.....,

படம் பார்த்து புதுக்கவிதை பொழிவோம்-17

தமிழ்க் கவிதை பூங்கா கவிஞர்களே!!
தினம் ஒரு புதுக்கவிதை படைத்திடுவோம் ...
தேர்வு செய்யப்பட்ட கவிதை இதோ!
********************************
சரஸ்வதி ராஜேந்திரன்
********************************
கண்ணால் காண்பதுபொய்யென்று
கண்ணை கருப்புத்துணியால்
கண்ணை கட்டி நிற்கின்றாய்
வேண்டியவர் வேண்டாதவர்
வேறுபாடு தெரியக்கூடாதென்றுதானே
கண்ணைக்கட்டி நிற்கிறாய் ஆனால்
நீதிதேவதையான உன்னையே நீதிபதிகள் நிதிக்காக ஏமாற்றி
நீதியை சாக அடிப்பது தெரியுமாஉனக்கு?
சட்ட அஸ்திரங்கள் எல்லாம்
லஞ்ச லாவண்யத்தில்
நீத்துப்போகின்றன நிரபராதிகளே தண்டிக்கப்படும் கொடுமை
நிர்ணயமாகிவிட்டது நீயிருந்தும்
கண்ணைக்கட்டி காட்டில் விட்டமாதிரி
நீதி தேவதையான உன்னையே
குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் கொடுமைதான்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக