திங்கள், 15 பிப்ரவரி, 2016

புகைப்படபோட்டி-50 வல்லமை




கலிகாலம்
சுட்டிப்பெண்ணே உன்
சுட்டித்தனத்திற்குப் பயந்துதான்
கட்டிப்போட்டிருக்கிறாள் அன்னை
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரைதான்
கட்டளைகள் செலுத்தமுடியும்
இந்த நிகழ்வை பார்க்கும்போது
அந்த யசோதா வீதியிலுள்ளவீடுகளில்
வெண்ணை திருடிய மாயக்
கண்ணனை உரலில் கட்டிப்போட்டதுதான்
நினைவுக்குவருகிறது ..
தாய் கண்முன்னே காவல்இருக்கும் வரை
பெண்ணுக்கு பாதுகாப்பு
மனிதனின் காமம்
மரணகுழி வெட்டும் சோகம்
மலராத மொட்டுகளைக் கூட
மதிகெட்டு கசக்கக் கூடாதென்றே
அழுத்தும் பணியிலும்
துரத்தும் கடமையிலும்
கண்முன்னேயே கட்டிப்போட்டிருக்கிறாள்
என்ன செய்வது கலிகாலம்
பெண் பெயரில் இருப்பதால்
நதிகள் கூட பாழ்படுத்தப்ப்டும் நிலையில்
நீயெங்கே நான் எங்கே?
சரஸ்வதி ராஜேந்திரன்
உவமையும் ஒப்புமையும் அழகு. அக்கறையும் தாய்மை உணர்வும் இயலாமையுடன் சமூக அவலத்தைக் காட்டும் பாங்கும் நன்று சரஸ்வதி ராஜேந்திரன்.

2 கருத்துகள்: