புதன், 27 ஜனவரி, 2016

நிலா முற்றம்- 26-1-2016

வணக்கம் கவி உறவுகளே
நேற்றைய தலைப்பில் கவியெழுதி வெள்ளி முத்திரைப் பெறுகிறார் கவிதாயினி Saraswathi Rajendran
அவருக்கு நம் வாழ்த்துகள்
பசுமை
பசுமை பயிரோட்டம் ஒன்றே
பாரதத்தின் உயிரோட்டம் அன்று
காவிரித்தாய் ஓடும்தமிழ் நாட்டில்
கண்டதெல்லாம் பசுமை காட்சி
பூவிரித்து புகழ்விரித்த பசுமை ஆட்சி
பொன் விரித்த நெல்மணிகள் சாட்சி
நெல் விளைந்ததஞ்சை தரணியிலே
கல் முளைத்த கட்டிடஅணிகளே இன்று
தெருவோரம் இருந்திட்ட மரங்கள்
சருகாய் போய்விட்ட சோகங்கள்
சிறுமைகள் ஆடும் ஞாலத்தில் பசுமை
அருமையை உணர்ந்திட ஆளில்லை
வரும் இளைய தலைமுறைகளே!
ஒரு மனதோடு பசுமை புரட்சிசெய்து
பாரதத்தை பசுமையாய் ஆக்குங்கள்
சரஸ்வதி ராஜேந்திரன்
Muthupet Maran's photo.

1 கருத்து:

  1. வணக்கம்
    அம்மா

    கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு