செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தமிழ்த்தேர் -கட்டுரை--மே 2

பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் ஏட்டில் சிறப்புறும் இலக்கியமாக இன்றும் விளங்குகின்றன,அவ்ருடைய பாடல்கள் எளிமையானவை
சமுதாய மறுமலர்ச்சியைஏற்படுத்துபவை  ,தன்னுடைய சுயமுயற்சியாலும்,தெளிவாலும் கருத்தாழமிக்க பாடல்களைத்தந்து திரைஉலகில் ஒரு உன்னத   நிலையை அடைந்தார் ,அவர் குழந்தைகளுக்காக  அருமையான பாடல்கள் தந்தார் 
சின்னபயலே சின்ன பயலே சேதி கேளடா
என்றபாடலில் ,குழந்தைகளை பயமுறுத்தும் பழக்கத்தை சாடியுள்ளார் வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்று ஆடுதுன்னு விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க  ,வேலையற்ற வீணர்களின். மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே என்றுபாடினார் திருடாதே பாப்பா திருடாதே,தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடல் தூங்கியவர்களை எழுப்பிய பாடல் அதுமட்டுமா?உழவர்களுக்காக பாடிய பாடல் சிந்தையை கவரும் வகையில் உழவர்களின் துயரத்தை தெளிவு படுத்தியது .,தொழிளாலர்களுக்காக ,  செய்யும் தொழிலே தெய்வம் அந்தத்திறமைதான்  நமது செல்வம்  என்று ஞாபகபடுத்தினார் இதுமட்டுமா  நம்பிக்கை தரும் பாடல்களில் அவ்ர் திறமையை வெளிப்படுத்தினார் ,,காயும் ஒரு நாள் கனியாகும் ந்ம் கனவும் ஒரு  நாள்னினைவாகும் என்று நமக்கு நம்பிக்கை தந்தார்  ஏற்றமுன்னா ஏற்றம் இதிலேயிருக்கு முன்னேற்றம்  தத்துவப்பாடலையும் அவர் விட்டு வைக்கவில்லை ,இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே,   குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா’ மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளேஅவன் ஆடி அட்ங்குவது மண்ணுக்குள்ளே,குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளன்  நரிகொன்றுவிடும் என்றும் பாடியுள்ளார் ,,அவரது பாடல்களை கேட்க்காத காதுகள் இல்லை, வாழ்த்தாத வாயும் இல்லை.இன்று அவர் இருந்திருந்தால்  இன்றைய சூழலுக்கு இன்னும் கருத்தாழமிக்க பாடல்கள் பல தந்திருப்பார்,காலன் அவரை சின்ன வய்திலேயே கொண்டு சென்றது திரை, உலகிற்கு மாபெரும் இழப்பு ,அப்படிப்பட்ட பாடல்களை எழுத பட்டுக்கோட்டையாரை விட்டால் யாரிருக்கிறார்கள். பட்டுக்கோட்டையாரின்           பாடல்களில்என் ஞாபகத்திற்குஎட்டியது வரை எழுதிவிட்டேன்  இன்னும் பலபாடல்கள் உள்ளன,

சரஸ்வதி ராசேந்திரந்--மன்னார்குடி 

2 கருத்துகள்:

  1. வணக்கம்
    அம்மா
    கட்டுரை மிக அருமையாக கருத்து மிக்கவையாக உள்ளது... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு