திங்கள், 6 ஜூலை, 2015

saraswathirajendran wrote on 4 July, 2015, 12:56
முகமூடி இல்லா முகங்கள்
அகத்தின் அழகு
முகத்தில் தெரியும் அதனால்
முகத்தை மறைக்கும்  அணிகலன்
முகமூடி  
இதை கோமாளிகள்
அணிந்து  சிரிக்க வைப்பர்
ஆனால் இன்று
ஆண் பெண் வித்தியாசமில்லாமல்
வீட்டிலும் நாட்டிலும்
பொய் முகஙகள் காட்டி 
வளைய வருகிறார்கள் 
சிரித்து கெடுப்பவர் சிலர்
நடித்து கெடுப்பவர் சிலர்
கடன் கேட்க ஒருமுகம்
கழிக்க ப் பார்ப்பது ஒருமுகம்
கோட்டையை பிடிக்க 
ஓட்டைவாங்க   என 
முகமூடி இல்லாத மனிதரெங்கே
இருக்கிறார் சொல்லுங்கள்
  பூ கொடுப்பவனே
தீயையும் வைக்கிறான்
இதில் யாரை  குறை சொல்ல
விதிதானே பழி செய்யுது
வாழ்க்கை எதுவென்று புரியாமல் 
வாய் விட்டு அழவும்  வசதியிருக்கு
இந்த முகமூடியில்
இல்லை ஒருவருக்கும் மனசாட்சி
எல்லாம் இன்று வேஷமாச்சு 
முகமூடி அணிந்த
எல்லோருமே கோமாளிகள் ஆனோம்

சரஸ்வதி ராசேந்திரன்

4 கருத்துகள்: