செவ்வாய், 11 ஜூன், 2013

காதல் வளர்த்தேன் தேவி வார இதழ் --30--9--2009

காதல் வளர்த்தேன்

பி..ஏ .படித்து பல இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்காததால் சொந்த மாக ஒரு எஸ் .டி .டி பூத்தும் ,ஜெராக்ஸ்
மிஷினும் வாங்கிகொடுத்தார் அப்பா .நானும் ,நல்ல பிள்ளையாகத்தான் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன் யார் கண் பட்டதோ தெரியவில்லை . கடந்த ஒரு மாதமாக டெலிபோன்தேவதயொன்று என் செல்லுக்கு போன்பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்ணுகிறது .மனம் கலகலத்து போனேன் நான் .இந்த விஷயத்தை என் நண்பர்களிடம் சொன்னபோது அது யார்னு
கண்டு பிடிக்கிறோம் என்றார்கள் .சொன்னதோடு அல்லாமல் கண்டுபிடித்தார்கள் எதிரே உள்ள மளிகை கடையிலிருந்து தான்
அந்த போன் வருகிறது என்று .அந்த கடையில் வேலை பார்க்கும் பெண்தான் அவள் முதலாளி காலையில் கடைக்கு வருவதற்குள் கடை போனிலிருந்து என் செல்லுக்கு போன் பண்ணி இனிக்க இனிக்க பேசுகிறாள் எனஅறிந்தஅவளுக்கு எப்படி தெரிந்தது என்று .அவளிடமகேட்டுயாரகண் பட்டதெரியவில்லை . கடந்த ஒரு மாதமாக டெலிபோன்தேவதயொன்று என் செல்லுக்கு போன்பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்ணுகிறது .மனம் கலகலத்து போனேன் நான் .இந்த விஷயத்தை என் நண்பர்களிடம் சொன்னபோது அது யார்னு

அந்த போன் வருகிறது என்று .அந்த கடையில் வேலை பார்க்கும் பெண்தான் அவள் முதலாளி காலையில் கடைக்கு வருவதற்குள் கடபோனிலிருந்து என் செல்லுக்கு போன் பண்ணி இனிக்க இனிக்க பேசுகிறாள் எனஅறிந்தேன்
ஓ,எதுதான் காதல் போலிருக்கிறது ,எங்கள் காதலுக்கு போன் தான் தூது .இருப்பினும் எனக்கு ஒரு குடைச்சல் .என்செல் நம்பர் அவளுக்கு எப்படி தெரிந்தது என்று .அவளிடமே கேட்டுவிட்டேன் .
'ஒருநாள் உங்க எஸ் .டி .டி பூத்துக்கு போன் பண்ண வந்தேன் அப்பொழுது மேசையில் இருந்த நோட்டில் உங்கள் பெயரும்
செல் நம்பரும் இருந்தது குறித்துக்கொண்டேன் "சொல்லிசிரித்தாள் போனில்தான்
"கில்லாடிதான் நீ "என்றேன் பெருமிதமாக .
"பின் காதலிக்கிறதுன்னா சும்மாவா ?சரிசரி எருமை வந்துடுச்சு ,நாளைக்கு பேசுறேன் "என்று போனை வைத்துவிட்டாள்.
அவள் அப்படி சொன்னது கடை முதலாளி மாணிக்கத்தைதான். இந்த டெலிபோன் நாடகம் இரண்டு மாதமாக தொடர்ந்தது .நானும் அவளை காதலிக்க ஆரம்பித்தேன் .காதல் பேச்சு நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது .
மளிகை கடைக்கு போன் பில் வந்தது மூவாயிரம் ரூபாய்க்கு .முதலாளி மாணிக்கம் காண்டானார் ,மண்டையை உடைத்துக்கொண்டார் .எப்படி என்று அவளை கூப்பிட்டு கேட்டார்
" என்னது மூவாயிரம் ரூபாய்க்கு பில் வந்துருக்கு கடையிலே வேறு யாராவது போன் யூஸ் பண்றாங்களா ?என்ன அக்கிரமமாக இருக்கிறது ?"என்று சப்தமிட்டார் .
"தெரியலே சார் நானிருக்கும் வரை யாரும் பேசுவதில்லையே "என்று ஒன்றும் தெரியாதது மாதிரி பேசினாள்கடைபையனை ப் பார்த்தபடி
.
அடுத்த நாள் வெகு நேரமாகியும் அந்தப்பெண் ஜெயந்தி வேலைக்கு வரவில்லை நேற்று நாம சப்தம் போட்டதால் அவள் வேலைக்குவரவில்லையோ ,உள்ளுக்குள்ளேயே நொந்து கொண்டார் மாணிக்கம் .
"ஏம்ப்பா ,அந்த பொண்ணு வரலையே ,ஏதாவது சொல்லிட்டு போனதா ?"கடை பையனிடம் கேட்டார் "
"இல்லை முதலாளி ....ஆனால் ஒரு விஷயம் ......முதலாளி "
என்னடா இழுக்கிறே ....சொல்லித்தொலைஏன்?"
"எத்ர்த்தாப்பிலே இருக்கிற எஸ் .டி .டி.பூத்திலே இருக்கிற பையன் கிட்டே நம்ம கடை போன் மூலமா தினமும் அந்த அக்கா
பேசும் முதலாளி "என்று கொளுத்தி போட்டான்
"என்னடா சொல்றே ?நேற்று கேட்டப்ப ஊமையன் மாதிரி நின்னையேடா பாவி "
"இதை முதலாளிகிட்டே சொன்னே ,உன் வேலைக்கு உலை வைச்சடுவேன்னுமிரட்டுச்சே ,முதலாளி நீங்களும் தான் அந்த அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடை சாவியையே கொடுத்து வைச்சீங்களே அதனாலே அது மிரட்டலுக்கு பயந்துதான் சொல்லலே "
பாவி,பாவி சரிடா எதிர்த்த எஸ் .டி.டி யும் பூட்டிஇருக்கே ஏன் ?"
"தெரியலே முதலாளி "என்று கடை பையன் சொல்லிக்கொண்டிருக்கவும் ,ஜெயந்தியோட அப்பா முருகேசன் வந்தார் ."
"என்னசார் பண்டிகை வருதேன்னு கடை பூட்டாம வியாபாரமா ?நம்ம பாப்பா இரவு வீட்டுக்கே வரலேன்னதும் ,உங்க வீட்ல
தான் தங்கியிருக்கும்னு எனக்கு தெரியும் .ஆனால் என பொஞ்சாதி தான் பொய் பார்த்துட்டு வாங்கன்னு ஒரே அலட்டல் .எங்கே என மகள்
"என்ன விளையாடுறீங்களா ?நேற்று ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிட்டு உங்க மகள் இன்னைக்கு இங்கே வரலேன்னதும்
.நான் நேற்று கோவிச்சு கிட்டதாலே வரலையோன்னு நினைச்சேன் ஆனால் இப்பத்தான் தெரியுது உங்க பெண் எங்கே போயிருப்பான்னு "
"எங்கே போயிருக்கா ?'
"இதோ பார் முருகேசன் ,உன் பெண்ணுக்கும் எதிரிலே இருக்கிற கடை பையனுக்கும் என்ன தொடர்புன்னு தெரியலே ,என கடை போனிலிருந்து தினமும் போன் பண்ணி பேசுவாளாம் .என்ன கன்றாவி யோ அவங்க காதலை வளர்க்க எனக்கு மூவாயிரம் ரூபாயிக்கு பில் வந்திருக்கு என்ன கொடுமை பாருங்க ?.நீங்க முதலில் அந்த பையனை பிடிங்க விஷயம் தெரியும் ".மாணிக்கம் சொன்னதும் முருகேசன் போலிசுக்கு போனார் ,போலிஸ் வந்தது மாணிக்கத்தை விசாரித்தது .பின் என வீட்டுக்கு வந்து தூங்கிகொண்டிருந்த என்னை தர தரவென இழுத்துபோய் ஸ்டேஷனில் வைத்து அடித்து துவைத்து
உட்கார வைத்தார்கள் .
"உண்மையை சொன்னீன்னா விட்டுடுவோம் இல்லே போலிஸ்காரன் வேலையை காண்பிப்போம் நகத்திலே ஊசி எத்தித்தான் பதிலை வரவழைக்கணும் என்னசொல்றே ?'
"நான் சாமி சத்தியமா சொல்றேன் எங்கம்மா மேல ஆணையா சொல்றேன் என்னை நம்புங்க அந்த ஜெயந்தி என கிட்டே
தினமும் ஆசை ஆசையா பேசுவாள் நானும் அவள் என்னை காதலிக்கிறான்னு நினைச்சு வழிய .வழிய பேசினேன் அதைத்
தவிர வேறொன்றும் எங்களிடையே கிடையாது நீங்க சொல்லித்தான் அவளை காணோம்னு எனக்கு தெரியும் 'இதுதான்சார் உண்மை "அழுதேன்

"இவனை உள்ளே உட்காரவை இதோ வரேன் "என்று இன்ஸ்பெக்டர் வெளியேறினார் .
மாலை ஆறு மணி .
'டூ நாட் செவென் அந்த பையனை இங்கே அனுப்பு "என்றார் நான் கூனி குறுகி இன்னும் என்ன மாதிரி அடி விழப்போகிறதோ என்ற கலக்கத்தில் வர
'சாரி தம்பி ,அந்த பெண் உன்கிட்டே நடிச்சுட்டு கடைக்கு பக்கத்து வீட்டு பையனோடு ஓடி போயிருக்காள் .உன்கிட்டே தினமும் பேசியதாலே நீதான் கடத் திட்டேன்னு நினைச்சுட்டோம் நீ வீட்டுக்கு போகலாம் .இந்தா உன் டிரஸ் .இன்மேலாவது ஜாக்கிரதையா இரு "சர்வ சாதாரணமாக சொன்னார் இன்ஸ்பெக்டர்
"அட பாவி என மனசையும் கெடுத்து என மானம் மரியாதையும் வாங்கிட்டியே உன் காதலை வளர்க்கவும் என்னை ஏமாற்றி
இன்னொருவனுடன் ஓட வு மா நடித்தாய் பாவி ,பாவி நான் எப்படி இனி வெளியிலே தலை காட்டுவேன் ?என சபலத்துக்கு
இது வேண்டியதுதான் .உள்ளுக்குள்ளேயே புழுங்கினான்
"சாரி தம்பி நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன் அந்த நாய் தன காதலை வளர்க்க எனக்கு மூவாயிரம் தண்டம் வைச்ச கோபத்துலே உன்னை தப்பா நினைச்சுட்டேன் நீயாவது அவள் எப்படின்னு தெரிஞ்சு க்க வேண்டாமா ?பாவம் சின்ன பையன் உங்களுக்கும் சபலம் தம்பி இனிமேலாவது ஜாக்கிரதியா இருங்க " மாணிக்கம் என்னிடம் மன்னிப்பு கேட்டார் அவர்களுக்கென்ன சுலபமா மன்னிப்பு கேட்டுவிட்டார்கள் மானம் மரியாதை போ ய் அடியும் இல்ல நான் வாங்கினேன்

வாங்கிய அடியில் உடல் ரணமாக ,முனகிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன் வீடும் என்னை விளாசி வெறுத்தது சபலத்துக்கு இத்தனை விலையா ?
தேவி வார இதழ் 30-9 --2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக